Wednesday, January 2, 2008

இரண்டு பெண்களும் 80 குடிகார வெறியர்களும்..

மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு ஹோட்டலை விட்டு தங்கள் ஆண் நண்பர்களுடன் வெளியே வந்த இரண்டு பெண்களிடம் 80 பேர் கொண்ட குடிகார கும்பல் ஒன்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கிறது. உடன் வந்த ஆண் நண்பர்களையும் தாக்கி பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டிருக்கிறது.

இந்தியா பண்பாடு மிக்க நாடாம்..பெண்களை தெய்வமாக போற்றும் நாடாம்..!
தூத்தேறி!
பார்க்கவும்...



5 comments:

G.Ragavan said...

ஐயையோ...ஆண்களைக் குற்றம் சொல்லலாமா? இரவில் வெளியே வந்ததுதானே பெண்களின் குற்றம். வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்திருந்தால் 80 பேரும் எதுவும் செய்திருக்க மாட்டார்களே............இப்படியெல்லாம் உங்களுக்குப் பின்னூட்டங்க வரலாங்க. :)

ஆண்கள் குடிக்காம இருக்கனும்...ஆண்கள் ஒழுங்கா இருக்கனும்னு சொல்லப்படாது. பெண்களுக்கு ஆண்களிடமிருந்து பாதுகாப்பு வேணும்னா ஒளிஞ்சிக்கிறனும். இப்பிடி பப்ளிக்கா நடமாடக் கூடாதுன்னு உலக பண்பாட்டுக் காப்பாளர்கள் எல்லாரும் சொல்றாங்கய்யா.

Anonymous said...

There are so many other incidents like this....Fraud....Sex...Cheating....Murders.....So for everything you want blame country.....

Good motto....

What do you did for that country?....Sorry this may be a small question for you...you are living a ideal person in the world....

Great ma

Anonymous said...

அந்த 80 பேருல ஒருத்தன் தான் மேலே பின்னூட்டம் இட்டிருக்கும் அனானி

ச.மனோகர் said...

'There are so many other incidents like this....Fraud....Sex... Cheating....Murders.....So for everything you want blame country.....'

அய்யா..இந்த மாதிரி சம்பவத்தின் மீது நமது உணர்ச்சியை வெளிப்படுத்தும் முறையாக இதை எடுத்துக்கொள்ளுங்கள்.
இது சாதாரணமாக நடக்கும் செயல்தானே என்ற ரீதியில் சொல்லவேண்டாம். எதிர்ப்பை தெரிவியுங்கள்..உங்கள் கோபத்தை காட்டுங்கள்.அது கொஞ்சமாவது இவ்வகையான சம்பவங்களை குறைக்க உதவும்.முடியாது என்று சொல்வீர்களானால் நம் வீட்டு பெண்களும் வெளியே செல்லும் சூழ்நிலை நிலவுகிறது என்பதை மட்டும் நினைவூட்டுகிறோம்.

What do you did for that country?....Sorry this may be a small question for you...you are living a ideal person in the world....

நானும் இந்த நாட்டில்,இந்த மக்களில்
ஒரு அங்கம்தான். அதனால்தான் இந்த சம்பவத்திற்கு வெட்கப்படுகிறேன்.. கோபமும் படுகிறேன்.காறி துப்புவது என் மீதும்தான் விழுகிறது.

நண்பரே!இந்த செய்தியை படித்ததும் உங்களுக்கு ஒரு உணர்வும் தோன்றவில்லையா?

Unknown said...

மிக மிக தவரு அனானி. சுயமாக ஒழுக்கம் வேண்டும். அது தான் சொல்ல வரும் விஷயம். ஓவ்வருவரும் சுய ஒழுக்கத்துடன் இருந்தால் ப்ரச்னை இல்லை.