Wednesday, June 27, 2007

பிரதிபா பட்டீலும் அருள்வாக்கும் !!

‘நான் உயர் பதவியில் அமர்வேன் என்று எனக்கு அருள்வாக்கு கிடைத்தது’
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதிபா பட்டீல் பேட்டி.


இதுதொடர்பாக தனியார் டெலிவிஷன் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரதீபா பட்டீல் கூறியதாவது:-


அருள்வாக்கு..

‘நான் சமீபத்தில் பிரம்மகுமாரிகள் உலக ஆன்மீக பல்கலைக்கழத்தின் தலைவர் தாதிஜியை சந்தித்து பேசிய போது, எனக்கு ஓர் இனிய அனுபவம் கிடைத்தது. தாதிஜியின் உடலில் பாபா (பிரம்மகுமாரிகள் பிரிவின் நிறுவன தலைவர் மறைந்த லெக்ராஜ்) ஆவி வந்து அவர் மூலம் பாபா எனக்கு அருள்வாக்கு சொன்னார். நான் அதிர்ஷ்டசாலி என்றும் மிகப்பெரிய பொறுப்பு எனக்காக காத்து இருப்பதாகவும் அதற்கு நான் தயாராக இருக்குமாறும் கூறினார்.’

இவ்வாறு பேட்டியில் பிரதிபா பட்டீல் தெரிவித்து உள்ளார்.
(தினத்தந்தி-27/06/2007)

ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேறும் அப்துல் கலாம் அவர்கள் குழந்தைகள் மத்தியில் விஞ்ஞானத்தையும்,நாட்டின் வளர்ச்சியையும் பற்றிய கனவுகளை உருவாக்கினார். இந்த அம்மையார் உள்ளே வரும் போதே ஆவி,அருள்வாக்கு என்று குழந்தைகளை குழப்பத் தொடங்கிவிட்டார்.

நாட்டின் மிக உயர்ந்த பதவியில் அமரப்போகும் ஒரு பெண்மணி,தன் தனிப்பட்ட நம்பிக்கையை வெளிப்படையாக தெரிவித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. பல்வேறு மதத்தினரும் வாழ்ந்து வரும் ஒரு நாட்டின் ஜனாதிபதியாக வாய்ப்பு உள்ள ஒருவர் இப்படி கூறுவது மற்ற மதத்தினரின் நம்பிக்கையை பெறமுடியாமல் போகலாம்.

பதவி என்றதும் எல்லா மக்களுமே உணர்ச்சிவசப்படுகிறார்கள் !

4 comments:

Unknown said...

அய்யோ! ஆனாலும் இவுங்க ரொம்ப உணர்ச்சிவசப்படறாங்க சார். பாவம்!.

ச.மனோகர் said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சுல்தான் அவர்களே!

Unknown said...

மிகவும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள். திரைத்துறையில் இருப்பவர்களுடன் சில மாதங்கள் இணைந்து பணியாற்றிய வகையில் லைட்மேன், உணவு பறிமாறும் ஊழியர்கள், உதவி கலை இயக்குனர்கள்,நடனப்பெண்கள்,பிற கலைஞர்கள் என அடித்தட்டில் உழலும் கலைஞர்களுக்கு விடிவு என்பதே கிடையாது என்பதனை நன்கு அறிந்திருக்கிறேன். அதுவும் இத்துறையில் தோற்றவர்களும், அவர்களின் குடும்பமும் படும் பாட்டை சொல்லி மாளாது.

திரையில் ஓஹோவென்றிருந்த இயக்குனர் கதிர் அவர்களை சென்ற வருடங்களில் எங்கேனும் சந்தித்திருக்கிறீர்களா! உண்மை சட்டென முகத்தில் அறைய உறைவீர்கள்.

உங்களின் நடை பிரமாதமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

siva.
sivaramang.wordpress.com

ச.மனோகர் said...

சிவா...தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!

'திரையில் ஓஹோவென்றிருந்த இயக்குனர் கதிர் அவர்களை சென்ற வருடங்களில் எங்கேனும் சந்தித்திருக்கிறீர்களா! உண்மை சட்டென முகத்தில் அறைய உறைவீர்கள்'

ஏன் என்னாச்சு கதிருக்கு?