Tuesday, May 15, 2007

அழும் பெற்றோர்கள்..

விஜய் டி.வியில் 'ஜுனியர் சூப்பர் சிங்கர்' என்ற நிகழ்ச்சி ஒளி பரப்பாகி வருகிறது. இதில் பங்கேற்கும் குழந்தைகள் கடும் பயிற்சிக்கு பின்னரே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். பல்வேறு கட்டங்களாக இந்த தேர்வு நடை பெறுகிறது. சில கட்டங்களில் சில குழந்தைகள் தோல்வியுற்று போட்டியிலிருந்து விலக்கப் படுகிறார்கள்.அப்போது நிகழ்ச்சியின் நீதிபதிகளாக வருபவர்கள் தோல்வியுற்ற குழந்தைகளுக்கு ஆறுதலாக பேசி, இன்னும் நல்ல முறையில் பயிற்சி செய்தால் பல வெற்றிகளை அடையமுடியும் என்று நம்பிக்கையூட்டுகிறார்கள்.கலங்கிய கண்களுடன் அந்த குழந்தைகள் மேடையைவிட்டு விலகுகிறார்கள்.

சின்ன வயதில் அந்த தோல்வியை அச்சிறு குழந்தைகளின் மனம் ஏற்று கொள்ளும் நிலையில் பக்குவப்பட்டு இருக்குமா? பாடுவதற்கு பயிற்சி அளிக்கும் பெற்றோர்கள், வெற்றி அல்லது தோல்வி அடையும்போது அதை எதிர்கொள்ளும் வகையில் குழந்தைகளை தயார் செய்கிறார்களா என்பது கேள்விக்குறியாகவே தெரிகிறது. ஏனென்றால் தோல்வியுற்று குழந்தைகள் மேடையை விட்டு இறங்கும் போது அவர்களின் பெற்றோர்களும் கண்கலங்கி உணர்ச்சிவசப்படுகிறார்கள்.

குழந்தைகளு க்கு ஆறுதல் சொல்லி, அவர்களின் மனநிலையை மாற்ற வேண்டிய பெற்றோர்களே கண்கலங்குவது குழந்தைகளின் மனநிலையை நிச்சயம் பாதிக்கும். பெற்றோர்கள் இதை கவனத்தில் எடுத்து கொள்வார்களா?

1 comment:

முரளிகண்ணன் said...

இதற்கே அழுதார்கள் என்றால் பெரிய பிரட்சினைகளுக்கு என்ன செய்வார்கள்