Thursday, January 17, 2008

என்னய்யா சொல்கிறார்கள் இவர்கள்..?





புகார் காளைகளே வந்து தர வேண்டுமாமா? காளைகள் வதைபடுகிறதா இல்லையா என்பதை பார்த்தாலே தெரியாதாமா? முதலில் இந்த விளையாட்டில் கலந்து கொள்ள விருப்பம் இருக்கிறதா என்று காளைகளிடம் கேட்கப்பட்டதா எனவும் தெரியவில்லை.


முப்பது பேர் சேர்ந்துகொண்டு,குச்சியில் குத்தி,வாலைப்பிடித்து இழுத்து ஒரு காளையை அடக்குவது நம் வீர விளையாட்டாமா?


ஆயிரம் ஆண்டுகள் செய்து வந்தாலும் தவறான செயல்கள் தவறான செயல்கள்தான். இனியாவது மனிதனுக்கும்,மிருகங்களுக்கும் ஆபத்தான இந்த விளையாட்டை தடை செய்தே ஆகவேண்டும்.






Saturday, January 12, 2008

இது உண்மையா?


இது எனக்கு junk mail-லில் வந்தது. மெக்காலே மெய்யாலுமே இப்படித்தான் சொல்லியிருக்கிறாரா?
படத்தின் மீது கிளிக் பண்ணி பெரிதாக்கி படிக்கவும்.

Wednesday, January 2, 2008

இரண்டு பெண்களும் 80 குடிகார வெறியர்களும்..

மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு ஹோட்டலை விட்டு தங்கள் ஆண் நண்பர்களுடன் வெளியே வந்த இரண்டு பெண்களிடம் 80 பேர் கொண்ட குடிகார கும்பல் ஒன்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கிறது. உடன் வந்த ஆண் நண்பர்களையும் தாக்கி பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டிருக்கிறது.

இந்தியா பண்பாடு மிக்க நாடாம்..பெண்களை தெய்வமாக போற்றும் நாடாம்..!
தூத்தேறி!
பார்க்கவும்...